Sunday 20 June 2010

என்னவனே..



காதோரம் கற்றைமுடி
சிலுப்பிவிட்டு சில்மிஷிக்க
பனியெடுத்து பரவவிட்டு
இதயம் தேடிய ஈரக்காற்று
கவிதை நிரப்பி
காதல் கிளப்பி
சுடுகாத்தாய் சென்றது

கண் பார்த்து
கை கோர்த்து
கணம் பொறுக்க
மனம் மறுக்க
இதழ் துடிக்க
இமை நெருங்க

உதடுகளின் ஈரம்
உயிர்வரை ஏறும் 
மறந்து போய் விழித்தால்
மஞ்சம்தனில் நான் 
வந்தாய் சொல்லாமலே
சென்றாய் நில்லாமலே 
என்னவனே நீ யார் !

13 comments:

  1. கேட்டு சொல்றேன்.. :)

    ReplyDelete
  2. நல்லா வந்திருக்கு. அந்த ’சிமிஷிக்க’ என்ற பிரயோகம் என்னைக் கவர்ந்தது.

    ReplyDelete
  3. @SanjaiGandhi
    நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே கேட்டுட்டேங்க ! :-)

    @பரிசல்
    அது ஒன்னு தான் உருப்படின்னு புரிஞ்சுகிட்டேன் ஹி ஹி .. நன்றிங்க.

    ReplyDelete
  4. நல்லாயிருக்குங்க

    ReplyDelete
  5. //சுடுகாத்தாய் சென்றது//

    நல்லாயிருக்குங்க...ரசித்தேன்...

    ReplyDelete
  6. @கார்க்கி
    :-)
    @வேலு @பாலாசி
    நன்றிங்க

    ReplyDelete
  7. //உதடுகளின் ஈரம்
    உயிர்வரை ஏறும்
    மறந்து போய் விழித்தால்
    மஞ்சம்தனில் நான்
    வந்தாய் சொல்லாமலே
    சென்றாய் நில்லாமலே
    என்னவனே நீ யார் !//

    அழகான, அற்புதமான வரிகள்...

    ReplyDelete
  8. லண்டன் குளிர்-ல இப்படியெல்லாம் யோசிக்க சொல்லுதா?

    ReplyDelete
  9. //இதயம் தேடிய ஈரக்காற்று
    கவிதை நிரப்பி
    காதல் கிளப்பி
    சுடுகாத்தாய் சென்றது//


    ஓஹோ... அப்படியா சங்கதி.

    ReplyDelete
  10. //உதடுகளின் ஈரம்
    உயிர்வரை ஏறும்
    மறந்து போய் விழித்தால்
    மஞ்சம்தனில் நான் //

    உணர்வுகளை இதை விட சிறப்பாக சொல்லுதல் சிரமம்.

    ReplyDelete
  11. @பிரேமா மகள்
    அடிக்கிற வெய்யிலு மண்டையப் பொளக்குது, குளிராம்ல..
    @ksurendran
    அதே.........தாங்க :-)வெய்யில் கனவுலயும் வருதுங்களே..
    @கொல்லான்
    நன்றிங்க !!

    ReplyDelete

தட்டிக்கொடுத்தும் திட்டுக்கொடுத்தும்......