Monday 21 February 2011

மலேசியா வாசுதேவன் - திரும்பாத பூங்காற்றுக்கு இறுதி மரியாதை

இசையை நேசிக்காத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது. திரையில் அது கதாநாயகர்களின் வெளிப்பாடாக இருந்தாலும் இசை மட்டுமே ஒரு பாடகரின் முகவரி. சந்தோஷத்தை இரட்டிப்பாக்கவும், சோகத்தை இன்னும் ஆழப்படுத்தவும் இசையால், பாடகரின் குரலினால் மட்டும் முடியும் அதிசயம்; பகிரப்படும் மகிழ்ச்சி, இயற்கையின் அழகு, தாய்மை, கல்லூரி நாட்களின் குதூகலம், வெளிப்படுத்தாத காதலின் சோகம் இப்படி ஒவ்வொரு உணர்வும் தன் குரலாய்  மனிதன் கேட்பதே பாடல்களின், பாடகர்களின் வாயிலாகத் தான்.


முதல் மரியாதை -என் நினைவு தெரிந்து நான் ரசித்த படங்களில் கதாப்பாத்திரத்தோடு மிக ஒன்றிய பாடல்கள் கொண்டது. படத்தின் வெற்றிக்கு சிவாஜி எவ்வளவு காரணமோ, அவ்வளவு இசையும் காரணம். மலேசியா வாசுதேவன் என்ற இசை அருவியின் குரல் தான் எத்தனை உணர்வோட்டமாய், வருத்தமாய், சந்தோஷமாய் ஒவ்வொரு இடத்திலும் அதற்க்கு ஏற்றார் போல் எத்தனை பொருத்தமாய் !! அது மட்டுமல்லாமல் கண்களை இடுக்கிப் பார்த்தே வில்லன் பரிமாணமும் எடுத்தவர். ஏறத்தாழ 8000 பாடல்களும், 85 படங்களில் வில்லனாகவும் நமக்கு திரைவிருந்து கொடுத்துள்ளார். பிறந்தது மலேசியாவில் என்றாலும், தமிழுக்கு இவர் கிடைத்தது இசை ரசிகர்களின் வரம் என்பேன். 1980, 1990 ஆண்டுகளில் இவர் பாடிய பாடல்களை யாரும் மறக்க முடியாது.

கோடைக் காலக் காற்றே ...
https://youtu.be/tBmfvRpTkNY

ஆகாய கங்கை....
https://youtu.be/bfFT7danA_A

பொதுவாக எம்மனசு தங்கம்....
https://youtu.be/PrTibJi6q9I

ஆசை நூறு வகை....
https://youtu.be/rpg32O9udHA

என்னம்மா கண்ணு.....
https://youtu.be/EmO6YJl3nm8

இது போன்ற பாடல்கள் பாடல் காட்சிகளையும் தாண்டி, பல வருடங்களையும் கடந்து மலேசியா வாசுதேவனின் குரலுக்காகவே சூப்பர் ஹிட்டானைவை. ஸ்வர்ணலதா என்ற தேனூற்று வற்றியதன் அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில், இதோ இன்னுமொரு இழப்பு. இசைக்கலைஞன் மரித்தாலும் அவர் கொடுத்த இசை மறப்பதில்லை. திரும்பாத அந்த இனிய பூங்காற்றுக்கு இதய அஞ்சலி.

https://youtu.be/eXFqHsWDNkE








Friday 18 February 2011

மின்சாரக் கண்ணா...எல்லாருக்கும் உங்களை ஏன் பிடிச்சிருக்கு தெரியுமா?

தலைமுறை கடந்த கலைஞர் அவர்; சக கலைஞர்களின் அன்புக்கும் உரியவர்; திரையில் தோன்றும் அந்த நொடி  விசில் பறக்கும்; என் பையனுக்கு, எனக்கு, என் அப்பாவுக்கு, அட எங்க அம்மாயிக்கு கூட பிடிக்கும்ன்னா பாருங்களேன்..  நடிப்போ ,ஸ்டைலோ,  நல்ல மனசோ, எளிமையோ- ஏதாவது ஒரு விஷயத்தில் அவரை எல்லோருக்கும் பிடிக்கும் காரணம் இதுதான்.
Super Star Rajinikanth


NDTV வழங்கிய இந்த தசாப்தத்தின் சிறந்த பொழுதுபோக்குக் கலைஞர் விருதுக்கு ஒரு ரசிகையாக, ஒரு தமிழ்மகளாக வாழ்த்துச் சொல்வதில் மிகுந்த மகிழ்வை அடைகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் ரஜினி சார் !!

வில்லனோ ஹீரோவோ, கலக்குவார். நக்கல் பண்ணிகிட்டே சுத்துற பரட்டை, ஷீலான்னு கூப்பிட்டுகிட்டே நடந்து வர்ற அலெக்ஸ் பாண்டியன், பில்லா, அயம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன், சம்போ சிவசம்போ தீபக், தளபதி சூர்யா, மன்னன் கிருஷ்ணா, மாணிக் பாஷா, ஆறுபடையப்பன் , வேட்டையன் ராஜா, மொட்டை MGR , சிட்டி ம்ம்ம்...மே இதெல்லாம் அசத்தோ அசத்துன்னு அசத்தின பாத்திரங்கள்.

மிக ரசிக்கப்பட்ட,/கைதட்டப்பட்ட/விசிலடிக்கபட்ட சில காட்சிகள் ..




வாழும் நாள் வரை வெற்றி நடைபோடுங்கள் !!

டிஸ்கி: (இது தானா உன்னோட டக்கு-ன்னு நினைப்பவர்களுக்காக..ஹி ஹி )இரண்டு நாளுக்கு முன்பே போட்டிருக்க வேண்டியது; ஒரு முக்கியமான வேலை குறுக்கிட்டதால் தாமதம்.