Showing posts with label சினிமா சினிமா. Show all posts
Showing posts with label சினிமா சினிமா. Show all posts

Monday, 21 February 2011

மலேசியா வாசுதேவன் - திரும்பாத பூங்காற்றுக்கு இறுதி மரியாதை

இசையை நேசிக்காத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது. திரையில் அது கதாநாயகர்களின் வெளிப்பாடாக இருந்தாலும் இசை மட்டுமே ஒரு பாடகரின் முகவரி. சந்தோஷத்தை இரட்டிப்பாக்கவும், சோகத்தை இன்னும் ஆழப்படுத்தவும் இசையால், பாடகரின் குரலினால் மட்டும் முடியும் அதிசயம்; பகிரப்படும் மகிழ்ச்சி, இயற்கையின் அழகு, தாய்மை, கல்லூரி நாட்களின் குதூகலம், வெளிப்படுத்தாத காதலின் சோகம் இப்படி ஒவ்வொரு உணர்வும் தன் குரலாய்  மனிதன் கேட்பதே பாடல்களின், பாடகர்களின் வாயிலாகத் தான்.


முதல் மரியாதை -என் நினைவு தெரிந்து நான் ரசித்த படங்களில் கதாப்பாத்திரத்தோடு மிக ஒன்றிய பாடல்கள் கொண்டது. படத்தின் வெற்றிக்கு சிவாஜி எவ்வளவு காரணமோ, அவ்வளவு இசையும் காரணம். மலேசியா வாசுதேவன் என்ற இசை அருவியின் குரல் தான் எத்தனை உணர்வோட்டமாய், வருத்தமாய், சந்தோஷமாய் ஒவ்வொரு இடத்திலும் அதற்க்கு ஏற்றார் போல் எத்தனை பொருத்தமாய் !! அது மட்டுமல்லாமல் கண்களை இடுக்கிப் பார்த்தே வில்லன் பரிமாணமும் எடுத்தவர். ஏறத்தாழ 8000 பாடல்களும், 85 படங்களில் வில்லனாகவும் நமக்கு திரைவிருந்து கொடுத்துள்ளார். பிறந்தது மலேசியாவில் என்றாலும், தமிழுக்கு இவர் கிடைத்தது இசை ரசிகர்களின் வரம் என்பேன். 1980, 1990 ஆண்டுகளில் இவர் பாடிய பாடல்களை யாரும் மறக்க முடியாது.

கோடைக் காலக் காற்றே ...
https://youtu.be/tBmfvRpTkNY

ஆகாய கங்கை....
https://youtu.be/bfFT7danA_A

பொதுவாக எம்மனசு தங்கம்....
https://youtu.be/PrTibJi6q9I

ஆசை நூறு வகை....
https://youtu.be/rpg32O9udHA

என்னம்மா கண்ணு.....
https://youtu.be/EmO6YJl3nm8

இது போன்ற பாடல்கள் பாடல் காட்சிகளையும் தாண்டி, பல வருடங்களையும் கடந்து மலேசியா வாசுதேவனின் குரலுக்காகவே சூப்பர் ஹிட்டானைவை. ஸ்வர்ணலதா என்ற தேனூற்று வற்றியதன் அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில், இதோ இன்னுமொரு இழப்பு. இசைக்கலைஞன் மரித்தாலும் அவர் கொடுத்த இசை மறப்பதில்லை. திரும்பாத அந்த இனிய பூங்காற்றுக்கு இதய அஞ்சலி.

https://youtu.be/eXFqHsWDNkE








Friday, 18 February 2011

மின்சாரக் கண்ணா...எல்லாருக்கும் உங்களை ஏன் பிடிச்சிருக்கு தெரியுமா?

தலைமுறை கடந்த கலைஞர் அவர்; சக கலைஞர்களின் அன்புக்கும் உரியவர்; திரையில் தோன்றும் அந்த நொடி  விசில் பறக்கும்; என் பையனுக்கு, எனக்கு, என் அப்பாவுக்கு, அட எங்க அம்மாயிக்கு கூட பிடிக்கும்ன்னா பாருங்களேன்..  நடிப்போ ,ஸ்டைலோ,  நல்ல மனசோ, எளிமையோ- ஏதாவது ஒரு விஷயத்தில் அவரை எல்லோருக்கும் பிடிக்கும் காரணம் இதுதான்.
Super Star Rajinikanth


NDTV வழங்கிய இந்த தசாப்தத்தின் சிறந்த பொழுதுபோக்குக் கலைஞர் விருதுக்கு ஒரு ரசிகையாக, ஒரு தமிழ்மகளாக வாழ்த்துச் சொல்வதில் மிகுந்த மகிழ்வை அடைகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் ரஜினி சார் !!

வில்லனோ ஹீரோவோ, கலக்குவார். நக்கல் பண்ணிகிட்டே சுத்துற பரட்டை, ஷீலான்னு கூப்பிட்டுகிட்டே நடந்து வர்ற அலெக்ஸ் பாண்டியன், பில்லா, அயம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன், சம்போ சிவசம்போ தீபக், தளபதி சூர்யா, மன்னன் கிருஷ்ணா, மாணிக் பாஷா, ஆறுபடையப்பன் , வேட்டையன் ராஜா, மொட்டை MGR , சிட்டி ம்ம்ம்...மே இதெல்லாம் அசத்தோ அசத்துன்னு அசத்தின பாத்திரங்கள்.

மிக ரசிக்கப்பட்ட,/கைதட்டப்பட்ட/விசிலடிக்கபட்ட சில காட்சிகள் ..




வாழும் நாள் வரை வெற்றி நடைபோடுங்கள் !!

டிஸ்கி: (இது தானா உன்னோட டக்கு-ன்னு நினைப்பவர்களுக்காக..ஹி ஹி )இரண்டு நாளுக்கு முன்பே போட்டிருக்க வேண்டியது; ஒரு முக்கியமான வேலை குறுக்கிட்டதால் தாமதம். 

Tuesday, 5 October 2010

சன் பிக்சர்ஸ் கில்லாடிகள்

நானும் எந்திரன் விமர்சனம் எழுதி உங்களை எல்லாம் 'எத்தன பேரு'ன்னு எரிச்சலாக்கற எண்ணம் எதுவும் இல்லீங்க; ஆதி அவர்கள் ஒரு பதிவு எழுதி இருந்தாரு(இங்கே). அதை ஆமோதிச்சுப் பின்னூட்டம் போடப் போயி இத்தனையும் எழுதிட்டேன்.

சன் பிக்சர்ஸ் மக்கள் 'எந்திரன்'-ன்னு ஒன்னொன்னையும் விளம்பரப்படுத்தறதும் காசாக்கறதும் இருக்கே, அடேயப்பா !! மத்த படத்துக்குப் போடறா மாதிரி திருப்பி திருப்பி வெறும் விளம்பரத்தைப் போட்டா வேற சேனல் மாத்தாம மக்கள் டிவியே ஆப் பண்ணிடுவாங்கன்னு தெரிஞ்சு போய்டிச்சு அவங்களுக்கு. ரஜினி, ஐஸ், ரஹ்மான் அவங்கெல்லாம்  படத்தப் பத்தி சொல்ற மாதிரி விளம்பரப்படுத்தறாங்க. இன்னா ப்ளானிங்கு,  இன்னா ப்ளானிங்கு !!  ஞாயித்துக்கிழமை போட்டிருந்தானே ஒரு நிகழ்ச்சி, 'எந்திரன் வெளியீட்டுக் கொண்டாட்டங்கள்'ன்னு. பாலபிஷேகங்கற கேணத்தனம் எப்பவும் நடக்கறது ; இப்போ உடம்புல குத்தி தேரிழுக்கறதும், மொட்டை போட்டுக்கறதும், பச்சை குதிக்கறதும், பால்குடம் எடுக்கறதும்.. ஹ்ம் சொந்த மக, புருஷன்/பொண்டாட்டி, அப்பா/அம்மாவுக்காக இப்படி என்னிக்காச்சும் வேண்டியிருக்காங்களா? பார்க்கப் பார்க்க கோபம், எரிச்சல் தான் வந்துச்சு. எல்லாம் சரி, நிகழ்ச்சி முடியும்போது ரெண்டு லைன் போட்டாங்களே !! "நீங்களும் எந்திரனை கொண்டாடி விட்டீர்களா?  இது போல் கொண்டாட்டங்கள் இருந்தால் , DVD அனுப்பவும்"ன்னு. அடப்பாவிகளா, மிச்சமிருக்கற மக்களையும் சட்டையக் கிழிச்சுட்டுத் திரியச் சொல்றீங்களாடான்னு நெனச்சேன்.

ஆதி அவர்கள் சொன்னபடி //குறைந்த பட்சம் ‘நான், கடவுள் அல்ல, என் கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம், பூஜை, தீபாராதனை போன்ற நான்சென்ஸுகளையாவது கைவிடுங்கள்’ என ஒரு அறிக்கை விடலாம்தான்// மனிதநேயமிக்க ஒவ்வொருவரின் எண்ணமும் இதுவே !! அதக்கூடவா ரஜினி செய்ய மாட்டாரு?

இத்தோட நம்மள எல்லாம் விட்டுட்டா எப்படி? இன்னும் வரும்.. "எந்திரன் படப்பிடிப்புக் காட்சிகள்", "எந்திரன் பாடல்கள் உருவான விதம்", "எந்திரன் சந்தித்த சோதனைகள்", "எந்திரன்-நடிகர்கள் பார்வையில்", "எந்திரன் பற்றி ஹாலிவுட் நடிகர்கள்" , "எந்திரன்- தொழில்நுட்பம்",  "எந்திரன்-100 வது நாள்", "எந்திரன்-250 வது நாள்", "எந்திரன்-366 வது நாள்", "எந்திரன்-500 வது நாள்" --இருங்க கொஞ்சம்  தண்ணியக் குடிக்கறேன்.

சாமீ இதெல்லாம் எந்திரனப் பாத்துட்டு எழுதுனது இல்லீங்க; படத்துக்கு சம்மந்தம் இருந்தாலும் நடக்கற விஷயங்கள்ல இவங்களுக்கெல்லாம் கொஞ்சமே கொஞ்சமாச்சும் மனசாட்சிக்கே தப்புன்னு தோணாதாங்கற ஆதங்கம், வேறொன்னும் இல்லீங்க.

ஹ்ம்ம்.. என்ன பேசி என்ன? என்னை யாரும் எந்திரன் பாக்கக் கூட்டிட்டுப் போக மாட்டீங்கறான்களே !!
ஹ்ம்ம்..