காதோரம் கற்றைமுடி
சிலுப்பிவிட்டு சில்மிஷிக்க
பனியெடுத்து பரவவிட்டு
இதயம் தேடிய ஈரக்காற்று
கவிதை நிரப்பி
காதல் கிளப்பி
சுடுகாத்தாய் சென்றது
கண் பார்த்து
கை கோர்த்து
கணம் பொறுக்க
மனம் மறுக்க
இதழ் துடிக்க
இமை நெருங்க
உதடுகளின் ஈரம்
உயிர்வரை ஏறும்
மறந்து போய் விழித்தால்
மஞ்சம்தனில் நான்
வந்தாய் சொல்லாமலே
சென்றாய் நில்லாமலே
என்னவனே நீ யார் !